நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 10, 2021

நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கினார். நெடுஞ்சாலைத் துறை வெளிப்படைத் தன்மையுடன் திறமையாக இயங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ரூ.28.31 கோடி செலவில் 1,213 மடிக்கணினிகள் மற்றும் 1,484 கணினிகளை அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர்மு..ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று (9.7.2021)  தொடங்கிவைத்தார். அதன்படி, அவர் 7 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ..வேலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்- திட்ட இயக்குநர் பி.கணேசன், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment