இந்த குழுவில், அரசு அலு வலர்கள் அல்லாத 4 பேரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய லாளர் மற்றும் மருத்துவ கல்வி இயக் குநர் உள்பட 9 பேர் உறுப்பினர் களாக நியமிக்கப் பட்டுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்த குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின் றனர். மேலும் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து, பாதிப்பு நிலவரங்கள் குறித்து கண்காணிப்பு செய்து வருகின் றனர். அத்துடன் அரசுக்கு தேவையான யோசனையை, தகவல்களையும் இந்த குழு வழங்கி வருகிறது. இந்நிலையில், கரோனா 3ஆவது அலையை தடுப்பது, டெங்கு, ஜிகா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ கண் காணிப்பு பணிக்குழுவுடன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளி கையில் நேற்று (11.7.2021) ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பூர்ண லிங்கம், சுகாதாரத்துறை செய லாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கரோனாவின் 3ஆவது அலையை தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடந் தது.
கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் டெங்கு, ஜிகா வைரஸ், டெல்டா பிளஸ் பாதிப் புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங் களில் 2 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டுள்ளனர். வரும் மழைக் காலங்களில் பாதிப்பை கட்டுப் படுத்த மாவட்டந்தோறும் சுகா தாரப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் விவாதம் நடந்தது.
கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் 13 பேருக்கு பரவி உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட் டத்தையொட்டிய பார சாலையை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண் டும் என்பதும் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக் கப்பட்டது. அத்துடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வும் அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment