பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினர் கூட்டம் நேற்று (13-7-2021) சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அனைவரும் மகிழ அவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.
நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினர் கு. அய்யாதுரை ரூ. 10000, திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ரூ. 2000, மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம் ரூ. 3700, விடுதலை வளர்ச்சி நிதியாக தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 1000, திராவிடப் பொழில் இரண்டு ஆண்டு சந்தா ரூ. 1600 கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.
கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, த.க.நடராசன், திராவிடமணி மற்றும் உறுப் பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment