புதுடில்லி, ஜூலை 6- கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக ஜூலை மாதம் கூட வேண்டிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் காலதாமதாக செப்டம்பர் மாதம் கூடியது. அதுவும் 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொட ரானது பல்வேறு பிரச் சினைகள் காரணமாக 11 நாட்களிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் மாதம் நடைபெற வேண் டிய குளிர்கால கூட்டத் தொடரும் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. கரோனா பரவலுக்கு இடையில் நாட்டின் பொருளாதாரம் மிக முக்கியம் என்பதால் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நாடாளு மன்ற மழைக்கால கூட் டத் தொடரை ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டி ருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக் கைகளை பின்பற்றி மழைக் கால கூட்டத் தொடர் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment