ஆப்கானிஸ்தானில் வெள்ளம் 150 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

ஆப்கானிஸ்தானில் வெள்ளம் 150 பேர் பலி

காபூல், ஜூலை 31- பருவ நிலை மாற்றம் காரண மாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடு களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற் படும் பெரும் வெள்ளம், மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அய்ரோப்பிய நாடுகளிலும், அதைத் தொடர்ந்து சீனா, இந்தி யாவிலும் கனமழை பெய்து பாதிப்புகள் ஏற் பட்டுள்ளன.

இந்நிலையில், ஆப் கானிஸ்தானிலும் கன மழை பெய்தது. இந் நாட்டின் நியூரிஸ்தான் மாகாணத்தில் உள்ள கம்தீஷ் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள் ளம் பெருக்கெடுத்தது.

இதில், ஏராளமான வீடுகள் மூழ்கின. இந்த நிலையில்  மலைப்பிர தேசத்தில் தலீபான் பயங் கரவாதிகள் கட்டுப்பாட் டில் உள்ள காம்தேஷ் பகு தியில் வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டவர் கள் இறந்துவிட்டதாக தக வல் வெளியாகியுள்ளது

மேலும்., 150 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புப் படைகள் ஈடு பட்டுள் ளன. இதனால், பலி எண் ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment