10 ஆண்டுக்கு ஒருமுறை தொலைநோக்குத் திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

10 ஆண்டுக்கு ஒருமுறை தொலைநோக்குத் திட்டம்!

மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்கவேண்டும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் என்று  திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை ஆய்வுக் கூட்டத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் நேற்று (26.7.2021) தலைமைச் செயலகத்தில் நடந்த, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில்,  இத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள துறைகளான, பொருளியல் மற்றும் புள்ளி யியல் துறை, மாநில வளர்ச்சிக் கொள் கைக்குழு, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முக்கிய திட்டங்களான, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் மேற்கொள் ளப்படும் வேளாண், பொருளாதாரக் கணக்கெடுப்புகள் குறித்தும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், பயிர் அறுவடைகளின் சராசரிக் கணக்கெடுப்புப் பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகளுக்கு நலன் அளிக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சி சிறக்கவும், முறையான திட்டங்களை வகுத்து, அவற்றின் செயல்பாட்டினைக் கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

சிறப்பான பயன்களைப் பெறுவது எப்படி?

அரசின் நிதி ஒதுக்கீடுகள் அதிகபட்ச மக்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வை யுடன் செயல்படுத்த வேண்டும் என்றும், திட்டங்களை வகுக்கையில் பல்வேறு துறை வல்லுநர்களையும், செயற்பாட்டாளர்களை யும் கலந்தாலோசித்து அவர்கள் கருத்து களைப் பெற்றுத் திட்டங்களை இறுதி செய்வது, மேலும் சிறப்பான பயன்களை அளிக்கும் என்றும் முதலமைச்சர் அறி வுறுத்தினார்.

மாநிலத்துக்கான சிறப்பு வகையிலான நிகழ்தரவு (Real Time Data) ஒன்றினை நிறுவுமாறும், மாநிலத்தின் முன்னேற்றத்துக் கான தொலைநோக்குத் திட்டங்கள் பத் தாண்டுகளுக்கு ஒருமுறை வரையறுக்கப் பட்டு ஒவ்வொரு அய்ந்தாண்டுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் நிகழ்மாற்றங் களுக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும் எனவும், முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில்  கூட்டுறவுத் துறை அமைச்சர் அய்.பெரியசாமி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன், மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெய ரஞ்சன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலை மைச்செயலாளர் .கிருஷ்ணன், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலை மைச்செயலாளர் விக்ரம் கபூர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் முனைவர் கருணாகரன், மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் உறுப்பினர் செயலர் பாஸ்கரபாண்டியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment