கரானோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 30, 2021

கரானோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மே 30 தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற் றோர்களை இழந்து, ஆதரவின் றித் தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.. ஸ்டா லின் அவர்கள் நேற்று (29.5.2021) தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆலோ சனை மேற்கொண்டார். 

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தை களைக் கண்டறிந்து, அவர் களுக்குத் தேவைப்படும் உத விகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்புப் பணிப் பிரிவுகள் அர சால் ஏற்கெனவே அமைக்கப்பட் டுள்ளன.  இந்நிலையில், மேற்படி ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், முதல மைச்சர் அவர்கள், கீழ்க்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

கரோனா நோய்த் தொற்றி னால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந் தைகளுக்கு, அவர்களது பெய ரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங் கிடவும்,

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங் கள் மற்றும் விடுதிகளில் முன் னுரிமை அடிப்படையில் தங்கு வதற்கு இடம் வழங்கப்படும். 

இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட் டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் உத்தரவிட் டுள்ளார்.

கரோனா நோய்த் தொற்றி னால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக் கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங் கப்படும்.

அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பரா மரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங் கப்படும்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச் சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக் கப்பட்டு கண்காணிக்கப்படும்.

அனைத்து அரசு நலத் திட் டங்களும் முன்னுரிமை அடிப் படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற் றோருக்கும் வழங்கப்படும்.

மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ற வாறு வழங்குவது குறித்த வழி காட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட,  கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை அவர் களது தலைமையில் வழிகாட்டு தல் குழு ஒன்று சமூக நலத் துறைச் செயலர் உள்ளிட்ட அலு வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / அமைப்புகளைச் சார்ந்தவர் களைக் கொண்டு அமைக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment