பா.ஜ.க. மாநாட்டில் காற்றில் பறந்த கரோனா தடுப்பு விதிமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 5, 2021

பா.ஜ.க. மாநாட்டில் காற்றில் பறந்த கரோனா தடுப்பு விதிமுறை

 

பெங்களூரு, ஏப்.5  பசவகல்யாணில் நடந்த பா.ஜனதா மாநாட்டில் கரோனா தடுப்பு விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டது.

2ஆவது அலை

கருநாடகத்தில் கரோனா 2ஆவது அலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தி வருகிறது.

மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. ஆனால் அரசின் உத்தரவை மீறி பா.ஜனதா சார்பில் ஒரு மாநாடு நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

முகக்கவசம் அணியாத தலைவர்கள்

பீதர் மாவட்டம் பசவகல்யாண் சட்டசபை தொகுதிக்கு வருகிற 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜனதா சார்பில் சரணரு சால்கார் என்பவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலையொட்டி பசவகல்யாண் டவுனில் உள்ள சாந்தி நிகேதன் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா சார்பில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை கருநாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல்  தொடங்கி வைத்து சரணரு சால்காரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சரணரு சால்கார், நளின்குமார் கட்டீல் உள்பட எந்த தலைவரும் முகக்கவசம் அணிந்து இருக்கவில்லை. அவர்கள் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்க வில்லை. அதுபோல மாநாட்டில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்.

அவர்களும் முகக் கவசம் அணியவில்லை. சமூக இடைவெளி விட்டு அமரவில்லை. இது தொடர்பாக காணொலிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளன.

இந்த காணொலிகளை பார்ப் பவர்கள் கரோனா தடுப்பு விதி முறைகள் எல்லாம் பொதுமக்க ளுக்கு மட்டும் தானா? அரசியல் கட்சி தலைவர்களுக்கு கிடையாதா? என்று கேள்வி எழுப்பி தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து பசவகல்யாண் வட்டாட்சியர் நாகய்யா ஹிரேமத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:- பாரதீய ஜனதா மாநாட்டில் கரோனா தடுப்பு விதிகளை கடைப் பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. அந்த மாநாட்டில் கரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அந்த மாநாட்டின் காணொலியை முழுமையாக பார்த்த பின்னர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment