ரஷ்யாவில் விலங்குகளுக்கான கரோனா தடுப்பூசி தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

ரஷ்யாவில் விலங்குகளுக்கான கரோனா தடுப்பூசி தயாரிப்பு

மாஸ்கோ, ஏப்.2 உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் விலங்கு களுக்கான கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறது. இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.

இதனிடையே கரோனா வைரஸ் மனிதர்கள் மட்டும் இன்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இந்த நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய கார்னிவாக்-கோவ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு பரிசோதிக்கப்பட்டன. 

இந்த சோதனை முடிவுகள் தடுப்பூசி பாதிப் பில்லாதது என்பதை உறுதி செய்ததோடு அது விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளிக்கிறது என்பதையும் வெளிப்படுத்தியது என்றார்.

மேலும் அவர், அமெரிக்கா, கனடா, போலாந்து, ஆஸ்தி ரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் கார்னி வாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன. எனவே இந்த மாதம் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment