அன்புடன் வேண்டுகிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 11, 2021

அன்புடன் வேண்டுகிறோம்!

கழக உறவுகளே,

பகுத்தறிவாளர்களே,

தமிழ் அன்பர்களே,

கரோனா கொடுந்தொற்றின் பயங்கரம் மீண்டும் ‘‘பெருஉரு'' கொள்கிறது.

தடுப்பு ஊசி போட்டவர்களாயினும்கூட, அவர்கள் முகக்கவசம் அணியாமல் எவரிடத்திலும் பேசக்கூடாது.

முகக்கவசம் நமது உயிர்க் கவசம்' என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்துங்கள்; அலட்சியம் வேண்டாம்.

சோப்புப் போட்டு அடிக்கடி கைகழுவுதல் அவசியம்.

கிருமி நாசினி (சானிடைசர்) மூலம் அடிக்கடி கைகளை, கைப்படும் பொருள்கள்மீதும் பயன்படுத்துங்கள்.

கபசுரக் குடிநீர் முதல்சி' வைட்டமின் மாத்திரை முதலிய நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கத்திற்கான வழிவகை - உணவு ஊட்டச்சத்து, மறவாதீர்!

கழகப் பிரச்சாரங்கள் - கொள்கை விளக்கங்கள் இவற்றை மீண்டும் காணொலிமூலம் கடமையாற்ற ஆங்காங்கு ஏற்பாடு செய்யுங்கள்.

தேவையின்றி வெளியே நடமாட்டத்தையோ, வெளியிடங்களில் உண்ணவோ, நெருங்கி நின்று உரையாடுதலையோ, சந்திப்புக்களையோ தவிர்த்திடுங்கள்!

தனிமை இனிமை தரும்' என்றாக்கி,

உங்களையும் பாதுகாத்து - மற்றவர்களையும் காப்பாற்ற உதவுங்கள்!

தொண்டறப் பணிகளும் தொடரட்டும்!

 

கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை 

11.4.2021

No comments:

Post a Comment