குடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

குடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 3- புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட் டங்களை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக, அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில், நாடு முழு வதும் மகா பஞ்சாயத்து கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில், உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் ஆத் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வ ருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங் கேற்று உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு விவசாயிகளின் நிலங்களை அபகரித்து 3-4 கார்ப் பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்க்க விரும்புகிறது. சொந்த நிலத்திலேயே விவசாயிகளை கொத் தடிமை ஆக்கப் பார்க்கிறது. 3 வேளாண் சட்டங்களும் கறுப்புச் சட்டங்கள். விவசாயிகளுக்கான மரண முன்னறிவிப்புகள். இதனால் தான் வாழ்வா; சாவா? என்ற நிலை யில், 90 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தங்கள் குடும்பத்தின ருடன் டில்லியில் போராடிக் கொண் டிருக்கின்றனர். 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை விட்டுள் ளனர். ஆனால், மத்திய அரசுக்கு கொஞ்சம்கூட இரக்கமில்லை. மாறாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்யாத அட்டூழியங்கள், அராஜ கங்களை விவசாயிகள் மீது ஏவிக் கொண்டிருக்கிறது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்தியதற்காக, விவசாயிகள் மீதே தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. நமது விவசாயிகள் எப்படி தேசத் துரோகிகளாக இருக்க முடியும்? நம்முடைய விவசாயிகள் எதையும் செய்வார்கள். ஆனால், நாட்டிற்கு எதிராக ஒருபோதும் செயல் பட மாட்டார்கள். டில்லி யூனியன் பிரதே சத்தின் முதல்வர் என்ற வகையில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். சுதந்திரத் தினத்தன்று டில்லி விவசாயிகள் பேரணியில் திட் டமிட்டு கலவரத்தை அரங்கேற்றிவர்கள் பாஜக-வினர்தான். டில்லி சாலைகளை சரியாகத் தெரியாத விவசாயிகளை மத்திய பாஜக அரசு தான் அன்று தவறாக வழி நடத்தியது. செங்கோட்டையில் சீக்கியக் கொடியை ஏற்றியவர்களும் அவர்கள் தான்." இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment