புதிய தளர்வுகளுடன் பொது முடக்கம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

புதிய தளர்வுகளுடன் பொது முடக்கம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

 டிச.7முதல் கல்லூரிகளில் இளநிலை இறுதி ஆண்டு வகுப்புகள் தொடங்க அனுமதி


சென்னை, நவ. 30- தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊர டங்கு உத்தரவு பல்வேறு தளர்வு களுடன் அமலில் இருந்து வரு கிறது.


கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத் தின் கீழ், 30.11.2020 முடிய தமிழ் நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற் கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க் கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.


பொருளாதாரத்தை மீட்டெ டுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற் றின் தன்மையை கருத்தில் கொண் டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக் கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


1) நிலையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங் களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாண வர்களுக்கென விடுதிகளும் செயல் பட அனுமதிக்கப்படுகிறது.


2) நிலையான வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை), முதுநிலை வகுப்புகள் 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல் பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


3) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக் காக மட்டும் செயல்பட அனுமதிக் கப்படுகிறது.


4) வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.


5) நிலையான வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி, சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.


6) நிலையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி, பொருட் காட்சி அரங்கங்கள் வர்த்தகர்க ளுக்கு இடையேயான செயல்பாடு களுக்கு மட்டும் அனுமதிக்கப்படு கிறது.


7) நிலையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி, உள் அரங் கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற் றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிட மும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களி டமும் உரிய முன் அனுமதி பெறு வது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.


8) வெளிமாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கருநாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர் களுக்கு தற்போது நடைமுறையி லுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.


ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடு களுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:


மத்திய உள் துறை அமைச்சகத் தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப் பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.


தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற் போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடை பிடிக்கப்படும்.


தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வு டன் செயல்பட வேண்டும். பல் வேறு தளவுர்களுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறை கள் அவ்வப்போது அரசாணைக ளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறை களை அனைவரும் தவறாது கடை பிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் உறுதி செய்ய வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment