கரோனா ஊரடங்கு காரணமாகப் பணியில் சேர முடியாத ஊழியர்களுக்காக விதிகளில் தளர்வு மத்திய அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 30, 2020

கரோனா ஊரடங்கு காரணமாகப் பணியில் சேர முடியாத ஊழியர்களுக்காக விதிகளில் தளர்வு மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 30- அலுவ லகப் பணியாக வெளியூர்க ளுக்குச் சென்றிருந்த மத்திய அரசு ஊழியர்கள் பலர், கரோனா ஊரடங்கின் கார ணமாகப் போக்குவரத்து வசதி இல்லாததால் உரிய நேரத்தில் ஊர் திரும்ப முடியாமல் போனது.


இதனால், மீண்டும் பணி யில் சேராத தேதி முதல் விடு முறை நாட்களாக கருதப் படுமா? என்ற சந்தேகம் அவர் களுக்கு எழுந்தது. இதனால் அதுபற்றி அவர்கள் விசாரிக் கும் நிலை ஏற்பட்டது.


இதைத் தொடர்ந்து மத் தியப் பணியாளர் நலத்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கமாக மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பி இருக்கிறது.


அதில் கூறப்பட்டு இருப்ப தாவது:-


அலுவலகப் பணி நிமித்த மாக வெளியூர் சென்ற அரசு ஊழியர்கள், கரோனா ஊர டங்கின் காரணமாகப்போக்கு வரத்து வசதி இல்லாததால் குறிப்பிட்ட நாளில் தங்கள் தலைமை அலுவலகத்துக்குத் திரும்ப முடியாத நிலை ஏற் பட்டு இருக்கலாம். அப்படி திரும்ப இயலாத ஊழியர்கள் அதுபற்றி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து இருந்தால், அவர்களுடைய அலுவலக வெளியூர் பயணம் முடிவடைந்த  நாளில் இருந்து அவர்கள் பணியில் சேர்ந்ததாக கருதப் படும்.


ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25ஆம் தேதிக்கு முன்னர் விடுமுறையில் சென்ற ஊழியர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். மருத்துவக் காரணங்களுக் காக விடுமுறையில் சென்ற வர்கள், அது தொடர்பான சான்றிதழைத் தாக்கல் செய் தால் அவர்களுக்கும் இது பொருந்தும்.


தலைமை அலுவலகத்தில் இருந்து மார்ச் 21ஆம் தேதி வெளியூர் சென்ற ஊழியர்கள், போக்குவரத்து வசதி இல்லா ததன் காரணமாக மார்ச் 23ஆம் தேதிக்குள் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற் பட்டு அதுபற்றி அலுவலகத் துக்குத் தகவல் தெரிவித்து இருந்தால், அவர்கள் 23ஆம் தேதி வேலைக்கு வந்ததாக கருதப்படும். விடுப்பு எடுத்து சென்றவர்களின் விடுமுறை நாள் ஊரடங்கு சமயத்தில் முடிவடைந்தால், அவர்கள் அந்த தேதியில் இருந்து மீண் டும் பணிக்கு வந்ததாக கரு தப்படும்.


இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.


No comments:

Post a Comment