சென்னையைப்போல் பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பில் தடுமாற்றம் பேராபத்தாகிவிடும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

சென்னையைப்போல் பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பில் தடுமாற்றம் பேராபத்தாகிவிடும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


சென்னை,ஜூலை 4, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகத்தில் சென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பில் தடுமாற் றம் இருந்தால் மக்களுக்குப் பேராபத்தாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.


அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:


தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் 4,343 பேர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். அதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வர்கள்- அதாவது 2322 பேர், சென்னை தவிர பிற மாவட் டங்களில் இந்த நோய்க்குள் ளாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலை யுமளிக்கிறது. 57 பேர் இறந்த தில், 35 பேர் வெளி மாவட் டங்களில் உள்ளவர்கள் என்ற அரசின் புள்ளிவிவரம் தமிழ் நாட்டில் ''சமூகப் பரவல்'' இல்லை என்று அமைச்சரும், முதலமைச்சருமே, மருத்துவ விஞ்ஞானிகள் போல் மாறி மாறி பேட்டியளித்து- ''நோய்த் தடுப்பு முயற்சிக்கான'' காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என் பதைத்தான் காட்டுகிறது.


சென்னை தவிரப் பிற தமிழக மாவட்டங்களில் ஜூன் 1ஆம் தேதியன்று கரோனா நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் 7725 பேர். ஆனால் ஜூலை 2ஆம் தேதி இந்த எண்ணிக்கை, 35 ஆயிரத்து 794 ஆக அதிகரித்து விட்டது. அப்போது வெளிமாவட்டங் களில் இறந்தவர்களின் எண் ணிக்கை, 46 ஆக இருந்தது, இன்றைக்கு 357 ஆக உயர்ந்து- 7 மடங்கைத் தாண்டி விட் டது. கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை தமிழகத்தின் பிற மாவட்டங் களில் 2688 ஆக இருந்தது- இன்றைக்கு 28 ஆயிரத்து 361 ஆகி- ஏறக்குறைய 10 மடங்கைத் தாண்டி விட்டது. நகர்ப்புறங் களில் வீசிய கரோனா ‘’அபாய அலை’’  கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது என் பதைத்தான் அதிமுக அரசின் செய்திக் குறிப்பு தெளிவு படுத்துகிறது.


கிராமங்களில் இப்படி யொரு அபாயகரமான சூழல் உருவாகி விடக்கூடாது என்ப தற்காகவே திமுக சார்பில், மாவட்ட வாரியாக கரோனா பரிசோதனை மய்யங்கள் மற் றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, நோய்க்கு உள் ளானோரின் மருத்துவமனை வாரியான எண்ணிக்கை, கரோனா நோய்ப் பரிசோ தனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறந்தோரின் எண்ணிக்கை, பெரும் பாதிப் பிற்குள்ளான நகரங்களில் இருந்து மாவட்டங்களுக்குச் சென்றோரின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக கரோனா நோய்த் தொற்றா ளர்கள் அனுமதிக்கப்பட் டுள்ள விவரம் உள்ளிட்ட பல் வேறு தகவல்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கேட்டார்கள்.


அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆகவே, மீண்டும் மாவட்டச் செயலாளர்களை கரோனா நோய் குறித்து ‘’32 தகவல்கள்’’ கோரி மாவட்ட ஆட்சித் தலை வர்களிடம் மனுக்களைக் கொடுக்குமாறு அறிவுறுத்தி னேன். இந்நிலையில், மற்ற மாவட்டங்களில்- குறிப்பாக, மருத்துவக் கட்டமைப்பு பெருமளவில் இல்லாத கிராமங்களில்  கரோனாவை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வினை மக்கள் மத் தியில் உடனடியாக அ.தி.மு.க. அரசு ஏற்படுத்திட வேண்டும். கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில் மருத்துவக் கட்ட மைப்பை வலுப்படுத்துவது, கரோனா நோய்க்கு உள்ளா னோருக்குச் சிகிச்சை அளிக் கப் படுக்கை வசதிகளை அதி கரிப்பது, வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் நோய் குறித்துத் தொடர் விசாரணை மேற்கொண்டு முறைப்படியான மருத்துவ உதவிகளைச் செய்வது, வென் டிலேட்டர்களின் எண்ணிக் கையை உயர்த்துவது, அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நோய்த் தொற்றாளர்களை கண்டுபிடிக்கத் தீவிர பரிசோ தனையை முடுக்கி விடுவது, கரோனா முன்கள வீரர்களுக் குத் தேவையான சுய மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொள் வது போன்ற அவசரகாலப் பணிகளில் இனியும் காலதா மதம் செய்யாமல் அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மன் றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.


சென்னையில் கட்டுக் கடங் காமல் போகும் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் பல்வேறு குழுக் களைப் போட்டு, அதிகாரி களுக்குள்ளும் அமைச்சர் களுக்குள்ளும் பனிப்போர் ஏற்படுத்தி’’ தடுமாறி நிற்பது போன்ற நிலை, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உரு வானால் மக்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் விடும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். நோய்த் தொற்றுப் பரவல் அதுவாகவே தணியட்டும், அப்போது நம்மால் தான் தடுக்கப்பட்டுத் தணிந்தது, குறைந்தது என்று புகுந்து பெயர் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து, உடனடியாகத் திட்டமிட்டு எந்த முயற்சியும் மேற்கொள் ளாமல் இருந்தால், ஆபத்தான கட்டத்தை அவ்வளவு எளி தாகக் கடந்து செல்ல முடி யாது என்பதை உணர வேண்டும். இதை நான் விடுக்கும் எச்சரிக்கையாகக் கொண்டு, மக்களைக் காப் பாற்ற அரசு முன்வர வேண் டும் என விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. நோய்த் தொற் றுப் பரவல் அதுவாகவே தணியட்டும் என நினைத்து எந்த முயற்சியும் மேற்கொள் ளாமல் இருந்தால், ஆபத்தான கட்டத்தை அவ்வளவு எளி தாகக் கடந்து செல்ல முடி யாது.


இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment