செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

செய்தித் துளிகள்....

* தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு - கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு. காலியிடங்கள் 10,276. இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு காவல்துறை வேலை வாய்ப்பு ஜிழிஹிஷிஸிஙி ஸிமீநீக்ஷீuவீtனீமீஸீt 2020.


* சொந்த ஊருக்கு இரயிலில் திரும்பும் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - உணவு, குடிநீர் வழங்கவேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.


* மாஞ்சா நூலில் பட்டம் விடுபவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும் - சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எச்சரிக்கை.


* நீலகிரி - கரோனா இல்லா மாவட்டம் என அறிவிப்பு.


* பண முடக்கத்தால் காய்கறி விலை வீழ்ச்சி!


* பெங்களூரு மேம்பாலத்துக்கு இந்து மத வெறியர் - சாவர்க்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு - நிகழ்ச்சி ஒத்தி வைப்பு.


* கரோனாவால் முடக்கப்பட்ட ஏழைகளுக்குத் தலா ரூ.7,500 வழங்கிட காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தல்.


* இந்தியா முழுவதும் 20 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


.* அயோத்தியில் ராமன் கோவில் கட்ட பாகிஸ்தான் எதிர்ப்பு.


* கரோனா: தெற்கு இரயில்வே தலைமையகம் மூடல் - இரு அதிகாரிகளுக்குத் தொற்று.


* இந்தியாவில் கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டறிய 30 குழுக்கள்.


* எட்டரைக் கோடி குழந்தைகள் இவ்வாண்டுக்குள் வறுமையில் தள்ளப்படுவர் - புதிய ஆய்வு.


*  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம். தகாத கேள்விகளைக் கேட்ட அமெரிக்க நீதிபதி பணி நீக்கம்.


* மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாசலில் உள்ள கடை தீயால் கருகியது.


No comments:

Post a Comment