சிதம்பரம் மாவட்ட கழகச் சார்பில் நிவாரண உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

சிதம்பரம் மாவட்ட கழகச் சார்பில் நிவாரண உதவி


சிதம்பரம் கழக மாவட்ட சார்பில் மூன்றாவது முறையாக, நலிவுற்ற கழகத் தோழர்களுக்கும், ஊனமுற்ற பொது மக்களுக்கும், அரிசி, மளிகைப் பொருட்கள் 23.5.2020 அன்று பூந்தோட்டம் கிராமத்தில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் துணைத் தலைவர் கோவி. பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ். திலீபன், மாவட்ட ப.க. தலைவர் ஆசிரியர்பூ.வே. அசோக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் அ. சுரேஷ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சிற்பி. சிலம்பரசன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் பூந்தோட்டம் செ. இராசா, ஒன்றிய தலைவர் ஆசிரியர் த. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர். மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், மாவட்ட ப.க. தலைவர் பூ.வே. அசோக்குமார் ஆகியோர் தங்கள் சொந்த செலவில் பொருட்களை வழங்கினர். 30 நபர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment