ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
தந்தை பெரியாரின் போர்வாள் ஆகிய அறிவாயுதம் விடுதலை நாளேடு 2020 ஜூன் ஒன்று அன்று தனது 86 ஆவது அகவை ஆண்டு விழாவினை காணுகின்றது. உலகம் முழுமையும் மக்கள் அச்சத்துடன் பல்வேறு நிலைகள் முடங்கிக் கிடக்கின்ற இந்தவேளையில் விடுதலையின் அமைதிப் புரட்சியை தன்னடக்கத்தோடு நான்கு பக்கங்கள் கொண்ட செய்திகள், மக்கள் அன்றாடம் பயன்பெறும் வாழ்வியல் நெறிமுறைகள், மருத்துவ குறிப்புகள் எண்ணற்ற விழிப்புணர்வு கருத்துக்கள் செய்து வருவதோடு தாங்கள் ஆணைப்படி விடுதலை வாசகர் விளைச்சல் பெருவிழா.
எவரும் செய்ய முடியாததை நாம் செய்வோம் வாசகர் சங்கிலி மூலம் வாகை சூடுவோம் நாம் செய்யவேண்டியது இந்த காலகட்டத்தில் தமிழர் இல்லந்தோறும் விடுதலை சென்றடைய ஒரு வாய்ப்பாக கருதி விடுதலை வாட்ஸ்அப் மூலமாக அத்துணை தோழர்களும் இந்த காலகட்டத்தில் விடுதலை விளைச்சல் கைமேல் பலன் என்ற அறுவடை செய்வோம். வாய்ப்பாக தமிழர் தலைவர் அவர்கள் அறிக்கையில் வெளியிட்டதற்கு ஏற்ப நமது பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் அவர்கள் எனக்கு அஞ்சல் மூலம் விடுதலை வராத நிலையில் பிடிஎஃப் வாட்ஸ்அப் மூலமாக தினந்தோறும் இரண்டு மாத காலமாக விடுதலை அனுப்பி வந்தார்கள் அதன் பெயரில் இன்றைய தினம் 250 பேர்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் என வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்து வருகின்றேன்.
அ. உத்திராபதி, பெரியார் நகர்,
ஒக்கநாடு மேலையூர் ஒரத்தநாடு
- - - - -
ஆசிரியர் அவர்களுக்கு இனிய வணக்கம்
நான் இ.மஞ்சரி.
த/பெ.மா.இளஞ்செழியன்.
(விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர், தஞ்சாவூர்,
செழியன் தங்க மாளிகை உரிமையாளர்)
நான் பூண்டி புஷ்பம் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி..
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலை .
கல்வி, வேலைவாய்ப்புகளில் உள்ள இட ஒதுக்கீடு பிரச்சனைகளில் ஆதாரபூர்வமாக முதலில் குரல் தருவது நம் விடுதலையே.
வாழ்வியல் சிந்தனைகள், ஆசிரியர் அய்யாவின் பதில்கள் சிறப்பு. மேலும் மகளிருக்கான பகுதி, மருத்துவம், வரலாற்று சுவடுகள் அருமை.
விடுதலையை கல்லூரிக்கு எடுத்து சென்று சக மாணவிகளுக்கு அரிய தகவல்களை தெரிவிப்பேன்.
மாதாமாதம் தஞ்சையில் பெரியார் பேசுகிறார், மற்றும் விடுதலை வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளேன்.
பெரியாரால் வாழ்கிறோம். பெரியார் வாழ்க.
இப்படிக்கு
இ.மஞ்சரி
தஞ்சாவூர்.
No comments:
Post a Comment