பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் கரோனா தொற்றால் வேலை வாய்ப்பு இழந்த எளிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு 24.5.2020 ஞாயிறு அன்று நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி பகுதி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் இணைந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 350 குடும்பங்களுக்கு வழங்கி உதவினர்.மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாரி கருணாநிதி, நகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், பெரியார் மன்ற நிர்வாகி கிராம அலுவலர் சுரேசு, ஆசிரியர்கள் சிவமணி, பழனிசாமி, கதிரவன், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன், பொறியாளர் சுதாகர், கலைமணி, எல்.அய்.சி. குணசீலன், ஊராட்சி அலுவலர் திருமுருகன், உள்ளிட்டோர் நிவாரண உதவிகளை வழங்கினர். நிவாரண பணிக்காக பெரும் முயற்சி எடுத்த இராஜாமணி ஆசிரியர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment