சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

சென்னை, மே 25 சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட் டைகள் 25 சதவீத தொழிலாளர்களுடன் இன்று (25.5.2020) முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, செயல்பாட்டு நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இந்த காலகட்டத்தில் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடு களை தமிழக அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, வேளாண்மை, சிறு தொழில் உள் ளிட்ட துறைகளில் பணிகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் இன்று முதல் சென்னை கிண்டி, அம்பத்தூர் உள் ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


தொழிற்பேட்டைகள் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் வருமாறு:-


தினமும் தொழிலாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்யவேண் டும். சமூக இடைவெளியை கடைப் பிடித்து பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும் உள்ளிட்ட மேலும் பல வழிமுறைகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல் குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment