சிந்துவெளிக்கு முந்தைய நாகரீகம் கீழடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 4, 2020

சிந்துவெளிக்கு முந்தைய நாகரீகம் கீழடி

உலகின் மிகப்பழைமையான சுண்ணாம்புச் சுவர் கண்டுபிடிப்பு



மதுரை, மார்ச்.4- திருப்புவ னம் அருகே கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப் பட்டு வரும் குழியிலிருந்து பகுதியாக வெளியே தெரியும் 2,500 ஆண்டுகளுக்கு முந் தைய ஒன்றரையடி சுண் ணாம்புச் சுவர் கண்டறியப் பட்டுள்ளது, இந்தச்சுவர் கட் டிய காலகட்டம் சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய கால கட்டம். ஆதலால் இதுவே உலகின் மிகவும் பழமையான மனித நாகரீகம் தோன்றிய இடமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.


கீழடியில் மத்திய-மாநில அரசுகள் தனித்தனியாக நடத் திய 5 ஆம் கட்ட அகழாய்வில், இப்பகுதியில் நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட் டது. மேலும், இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் பயன் படுத்திய பலவகைப் பொருள் கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை ரூ.12 கோடி மதிப்பீட்டில் காட்சிப் படுத்தி வைக்க அருங்காட்சி யகம் அமைக்கப்படவுள்ளது.


இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வு தற் போது நடந்து வருகிறது. கீழடி கிராமத்துக்கு அருகே யுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களி லும் அகழாய்வு நடத்தப்பட வுள்ளது.


முதலில், கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி, நடந்துவரும் நிலையில் மூன் றரையடி தோண்டப்பட்ட குழியிலிருந்து பழங்காலத் தமிழர்கள் கட்டியிருந்த ஒன் றரையடி நீளமுள்ள சுண் ணாம்புச் சுவர் பகுதியாக வெளியே தெரியவந்துள்ளது. குழியை ஆழமாகத் தோண் டிய பின்னரே, இச்சுவரின் நீளம், அகலம் தெரியவரும். எனவே, இச்சுவருக்கு சேத மில்லாமல் குழியைத் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதனிடையே, அகழாய்வு ஆர்வலர்கள் மற்றும் உல கெங்கும் வாழும் தமிழர்களி டையே 5 ஆம் கட்ட அக ழாய்வில் கிடைத்ததை விட, 6 ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத் தமிழர்கள் பயன் படுத்திய வியக்கத்தக்க பொருள் கள் அதிகளவில் கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது.


கீழடி சிந்துவெளி நாகரீ கத்தை விட சிறிது முந்தைய கால வளர்ந்த நாகரீகமாகும். இங்கு சுண்ணாம்புக் கலவைச் சுவர்கள் கிடைத்துள்ளதால். உலகின் அனைத்து நதிக்கரை நாகரீகத்திற்கும் மூத்த நாகரீ கமாக வைகை நதிக்கரை நாக ரீகம் இருந்துள்ளது. மேலும் ஆய்வுகள் நடைபெறும் பட் சத்தில் இன்னும் பல வியக்கத் தகு தமிழர் நாகரீகம் பற்றிய உண்மைகள் வெளியாகலாம் என்று அகழாய்வில் ஈடுபட்ட ஆய்வியலாளர்கள் கூறுகின்ற னர்.


No comments:

Post a Comment