தமிழைப் புறக்கணித்து இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் “தாலாட்டு” பாட வைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 4, 2020

தமிழைப் புறக்கணித்து இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் “தாலாட்டு” பாட வைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்


சென்னை, மார்ச் 4- தமிழர்களின் நாகரிகம், கலாச்சாரத்தை பறை சாற்றும் கோயில்களை காக்க மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.


அவர் 3.3.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது:


தமிழகத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு களஞ்சியங்களாக திகழ்பவை திருக்கோயிகள். தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் பட்டியலை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டம்; மத்திய கலை பண்பாட் டுத்துறை அமைச்சர் பிரகலாத சிங் படேலின் அறிக்கை உள் நோக்கம் கொண்டது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள், திருக்கோயில்களை தொல்லியல்துறை கட் டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. தமிழ கத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கெனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலை யத்துறை நிர்வாகக் கட்டுப்பாட் டில் உள்ளது.


கைப்பற்றுவோம் என்பது அநீதியானது


பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து - பாதுகாத்து, பராம ரிப்பதற்கென தமிழகத்தில் “தொல் லியல் துறை”ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மத்தி யத் தொல்லியல் துறையின் கட் டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பு இல்லாமல் கிடக் கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீ தியானது. கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று - அதற்கு முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக - அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டது. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று - அம் மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது.


பா.ஜ.க.வின் கலாச்சாரத் திணிப்பு


இதுபோன்ற சூழலில், பா.ஜ. க.வின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும் - தமி ழைப் புறக்கணித்து - இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங் களிலும் “தாலாட்டு”பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து - இந்த ஆபத்து மிகுந்த விளையாட் டில் மத்திய, பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது. மத்திய அமைச் சரின் அறிவிப்பு அடாவடியானது; மத்திய - மாநில உறவுகளுக்கு எதி ரானது; திருக்கோயில்களில் சமூக நீதி அடிப்படையிலான நியம னங்களைப் பறித்து - வட நாட்ட வருக்கும், மொழி தெரியாதோர்க் கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க் கும் முயற்சி ஆகும்.


எதிர்ப்பு காட்டாத அதிமுக அரசு


திருக்கோயில்கள் நிர்வாகத் தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க. மத்திய அமைச்சரின் இந்த செய லுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை அ.தி.மு.க. அரசும் - தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லி யல் துறை அமைச்சர் பாண்டிய ராஜனும் மவுனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமி ழகத்தின் உரிமைகளை ஒவ்வொன் றாக “தாராளமாக” தாரை வார்த் துக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியும், அமைச்சர் பாண்டிய ராஜனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத் தில் உள்ள திருக்கோயில்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு, இப்போது திரைமறைவில் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகமே எழுகிறது.


குறிப்பாக “தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன”என்று மத்திய அமைச் சர் பிரகலாத் சிங் பட்டேல் சுட் டிக்காட்டியிருப்பது:


தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண் டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு - தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம். தமிழக மக்க ளின் உணர்வை மீறி - மாநில உரி மையை நசுக்கும் விதமாக, திருக் கோயில்களையும், நினைவுச் சின் னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை - கலாச் சாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் - அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெ ரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.


இவ்வாறு தளபதி மு.க.ஸ்டா லின் அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்.


No comments:

Post a Comment