வெள்ள நிவாரணம் கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேலூர் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

வெள்ள நிவாரணம் கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேலூர் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

featured image

வேலூர், ஏப்.3- ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நாளை (3.4.2024) வழக்கு தொடர போகிறோம் என்று வேலூரில் நேற்று (2.4.2024) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வேலூர் – கோட்டை மைதானத் தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (2.4.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பா ளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உதயசூரியன் சின் னத்துக்கு வாக்குகள் திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது. ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறிவிடக் கூடாது. சமூகநீதி காற்றில் பறக்கக்கூடாது, மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே கூடாது என்பதற்காகத் தான் வாக்கு கேட்டு வந்திருக் கிறேன்.

பிரதமர் மோடியால் மக்களி டம் தன்னுடைய ஆட்சி சாதனை களைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. பழைய சம்பவங்க ளைப் பற்றி பொய்யான கதை களைச் சொல்லி, அதன் மூலமாக மக்களை குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா? என்று முயற்சி செய்கிறார்.
அதுதான் கச்சத்தீவு பிரச்சினை. இந்திய அரசு கச்சத் தீவை இலங் கைக்கு கொடுத்ததைப் பற்றி இப் போது பா.ஜனதா பேச ஆரம்பித்தி ருக்கிறார்கள். ஆனால், இது அவர் களுக்கு எதிராகவே திரும்பி விட்டது.

தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜனதா மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். 2014இல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா உச்ச நீதிமன்றத்தில் என்ன கூறியது? “கச்சத் தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்று கூறியது.

இந்த 10 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி. எத்தனை முறை இலங்கைக்கு பயணம் செய்தார் அப்போதெல்லாம் ஒரு முறையா வது கச்சத்தீவை மீண்டும் கேட்டி ருக்கிறாரா?
இலங்கை அதிபரை சந்தித்த போதெல்லாம் கச்சத்தீவு இந்தி யாவுக்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா?
அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்திற்கு வர வில்லை. நேரு காலத்தில் நடந்தது-இந்திரா காலத்தில் நடந்தது எல் லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?

நீங்கள் (பிரதமர்) கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத் தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைத் தர வேண்டும். “நீட்’ விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கை களை வைத்தேன்.
அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே. “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண் டும். மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண் டும்” என்றுதான் கோரிக்கை வைத்தேன்.

ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இது வரை படித்துப் பார்த்தீர்களா? எத்தனை கதைகள், எத்தனை நாடகங்கள்.
முதலில், ஆர்.டி.அய். விண்ணப் பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்?
இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர், 2015இல் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை” என்று பா.ஜனதா அரசு தகவல் கொடுத்தி ருக்கிறது. இப்போது தேர்தல் வரு கிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்?

மூன்றாவது, கடந்த பல ஆண் டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அதற்கு உரிய பதி லைச் சொல்லவில்லை. எத்த னையோ பேர் ஆர்.டி.அய். விண்ணப்பம் செய்தபோதும் தெளி வான தகவல்களை கொடுக்க வில்லை.

உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லா மல் இருந்த பா.ஜனதா, அரசு இப்போது ஆர்.டி.அய். மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத் தார்கள்? பா.ஜனதாவை சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி வெளியுற வுத்துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்?
நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக் கும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை? அருணாசலப் பிர தேசத்தின் பல பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந்தாரா?

30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீன மொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கி றதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையை கண் டிக்கவும் துணிச்சல் இல்லை. சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங் கள் கச்சத்தீவை பற்றி பேசலாமா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக் குத்தான் என்பதை எச்சரிக்கை யாகச் சொல்ல விரும்புகிறேன். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் ஆகி யோரைக் கைது செய்ததும் எவ் வளவு பெரிய தவறு என்று பா.ஜனதா விரைவில் உணரத்தான் போகிறது.
சர்வாதிகாரத்தை நோக்கி பய ணம் மேற்கொள்ளும் பா.ஜனதா விடம் நீதி, நேர்மை,நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், சட்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம்.

இந்த அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.
நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டு பார்த்தோம். தர வில்லை. நாளை (அதாவது இன்று 3.4.2024) காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறோம்.
தமிழ்நாட்டுக்கு விரோதமான கட்சி

மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மக்களோடு மக்களாக, மக்களுக்கு நெருக்கமாக இருப்பது மாநில அரசுகள்தான். மாநிலங்கள் நீதி பெறவும், நிதி பெறவும் உச்ச நீதிமன்ற கதவுகளைத்தான் தட்ட வேண்டும் என்றால். இதற்கு எதற்கு மோடி பிரதமர் பதவியில் உட் கார்ந்து இருக்கிறார் என்பதுதான் என்னுடைய கேள்வி.
தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் விரோதமான கட்சி பா.ஜனதா. அந்த கட்சிக்கு அளிக்கும் வாக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என் பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜனதா தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. இரண்டையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.

-இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment