Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
'தினமலர்' - 'காலைக்கதிரின்' வன்முறை - காவல்துறையின் கவனத்துக்கு
February 10, 2023 • Viduthalai

கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

'தினமலர்'  திரிநூல் ஏட்டுக்குத் திரா விடர் கழகத் தலைவர் என்றால் சிம்ம சொப் பனம்தான்.

அவ்வப்பொழுது  கரித்துக் கொட்டுவது, காலித்தனமாக எழுதுவது, வன்முறையை ஏவுவது என்பதைப் பிழைப்பாகக் கொண்டு வருகிறது.

'தினமலர்' வார மலரில் 3.3.2019 வெளி யிட்ட அதே கேள்வி -பதில் பகுதியை அட் சரம் பிறழாமல் தினமலர் குழுமத்தைச் சேர்ந்த 'காலைக் கதிரில்' 30.10.2022 அன்று வெளியிட்டது.

ஆஷ்துரைக்கு ஒரு வாஞ்சிநாதன், காந்தியாருக்கு ஒரு கோட்சே போல வீரமணிக்கு ஒருவன் என்ற முறையிலே 'காலைக்கதிர்' 'தினமலரில்' (எழுதுபவர் பெயர் மட்டும் மாற்றம்! என்னே பித்தலாட்டம்!) வெவ்வேறு தேதிகளில் வெளி வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறைத் தலைமை இயக்குநருக்குப் புகார் (13.1.2023) செய்தும், செயல்பாடு என்ன என்று தெரியவில்லை.

'தினமலரின்' விஷமம் முடியவில்லை. மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட (27.1.2023) சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் மாலை நேர திறந்த வெளி மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மானமிகு டி.ஆர். பாலு அவர்களின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பித்து இம்மாதம் 4ஆம் தேதி தினமலரில் "இது உங்கள் இடம்" என்ற பகுதியில் (4.2.2023) கடிதம் ஒன்றை வெளியிட்டது.

'தினமலர்' குழுமத்தைச் சேர்ந்த "காலைக்கதிர்" என்ற நாளேட்டில் (7.2.2023) அதே கடிதத்தை (இந்த முறை எழுதியவரின் பெயரை மாற்றவில்லை) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டுவரும் 'தினமலர்' 'காலைக்கதிர்' மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் நேர்முகமாகப் புகார் கடிதம் கொடுத்தும் கோப்பு அசையாதது ஏன்? திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஒரு தனி மனிதரல்ல.

தமிழ்நாட்டு மக்களுக்கான தனித் தன்மை வாய்ந்த தலைவர் - முதல் அமைச்சரின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தந்தை பெரியாரின் வழித் தோன்றல்! என்பது நினைவிருக்கட்டும்!


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn