26.1.2023 வியாழக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

26.1.2023 வியாழக்கிழமை

கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி: காலை 10.30 மணி * இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில் * வரவேற்புரை: 

இரா.லிங்கேசன் (ப.க. மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: உ.சிவதாணு  பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் * முன்னிலை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத்  தலைவர்), கோ.வெற்றி வேந்தன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர்) * கருத்துரை: குருசாமி (மாநில துணைத் தலைவர் ப.க.), சி.கிருஷ்ணேஷ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்) ச.நல்ல பெருமாள், ம.தயாளன், மா.மணி, ஞா.பிரான்சிஸ் * நன்றியுரை; எம். பெரியார்தாஸ் (ப.க. மாவட்ட செயலாளர்) * பொருள்: 1. சமூக நீதி பாதுகாப்பு, திராவிட  மாடல் பரப்புரை பெரும்பயணத்தில் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்களுடைய குமரி மாவட்ட வருகை, 2. பகுத்தறிவாளர்கழக வளர்ச்சிப்பணிகள்  * இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் குறித்த நேரத்தில்   பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் * இவண்: கன்னியா குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர்: காலை 10 மணி * இடம் : மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்) கட்சி அலுவலகம், பழைய எம்ப்ளாய்மென்ட் ஆபிஸ் அருகில், ஜெயா நகர், திருவள்ளூர்  * சமூக நீதி பாதுகாப்பு,திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் வரும்  தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும்,  பொதுக் கூட்டத்தை மிக சிறப்பாக நடத்திடவும்,  கழக  பொறுப்பாளர்கள்  மற்றும் கழக  தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டு கிறோம் * வரவேற்புரை:  இரா.ஸ்டாலின். (மாவட்ட துணை செயலாளர்) * தலைமை: கோ.கிருஷ்ண மூர்த்தி (மாவட்ட தலைவர்)  * சிறப்புரை: உரத்தநாடு இரா.குண சேகரன் (மாநில அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (மண்டல அமைப்புச் செயலாளர்) நன்றியுரை: ந.அறிவுச் செல்வன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம்  திருவள்ளூர் மாவட்டம்.

பெரியார் பெருந்தொண்டர் ஆ.முனுசாமி நினைவேந்தல் - படத்திறப்பு

தேவரடியார்குப்பம்: முற்பகல் 11 மணி * இடம்: தேவரடியார்குப்பம் * வரவேற்புரை: மு.இளங்கோவன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பெ.முனியன், 

கோ.கிருஷ்ணமூர்த்தி, ச.சுந்தராசன் (மாவட்ட செயலாளர் * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இப்படிக்கு மு.இளங்கோவன்.


No comments:

Post a Comment