''மகளிர் சுய உதவி குழுவினரின் கடன் தள்ளுபடி '' அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

''மகளிர் சுய உதவி குழுவினரின் கடன் தள்ளுபடி '' அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர், நவ.22 கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடந்த விவசாயத் துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது பேசிய அமைச்சர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொட் டிய கனமழையால் பாதிக்கப்பட்ட, விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.75 கோடி கடன் தள்ளுபடி தயார் நிலையில் உள்ளது. எனவும் அது விரைவில் தள்ளுபடி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.   கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு 20% விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகு நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும்  கூறியுள்ளார்.


No comments:

Post a Comment