செவிலியர்களுக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கினார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

செவிலியர்களுக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கினார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு

செவிலியர் பணிகளில் ஈடுபடுவோர் ஆற்றிய சிறந்த சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுகிறது. 

செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணிகளில் ஈடுபடுவோர் சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கு அங்கீ காரம் அளிக்கும் வகையில் ஒன்றிய சுகா தாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச் சகம் 1973ஆம் ஆண்டு தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் விருதுகளை ஏற்படுத்தி யது.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக் கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் (கைவிளக்கு ஏந்திய காரிகை) விருது வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளி கையில் நடைபெற்றது. தேர்வு செய்யப் பட்ட செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.தமிழ்நாட்டை சேர்ந்த இ.மங்கம்மாள் மற்றும் எஸ்.செல்வி ஆகிய இருவருக்கு விருது கிடைத்துள்ளது.

மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவருக்கும், கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment