டுவிட்டரில் 4 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

டுவிட்டரில் 4 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்

சான்பிரான்சிஸ்கோ, நவ 6- பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் விவரத்தை, டுவிட்டர் நிர்வாகம் மின் னஞ்சல் மூலம் தெரிவிக் கிறது..  உலகின் முதல் பணக் காரரான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள் ளார். 

இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண் டோடு கலைப்பு, டுவிட் டர் பயனாளர்களின் ‘புளு டிக்'கிற்கு கட்டணம் ஆகிய நடவடிக்கைகளை எடுத்தார். 

இதனிடையே டுவிட் டரில் ஊழியர்களை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கவும், பணிநீக்கம் செய்ய வேண் டிய ஊழியர்களின் பட் டியலை தயாரிக்குமாறு மேலாளர்களுக்கும் உத்தர விடப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியா னது. 

இந்த நிலையில் டுவிட் டரில் 50 சதவீத ஊழியர் களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை குறைக்க அவர் இந்த நடவடிக் கையை எடுத்து உள்ள தாகவும், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர் களுக்கு 60 நாட்கள் மதிப்புள்ள பணி நீக்க ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று அதிகம் எதிர் பார்க்கப்படுகிறது. டுவிட் டரில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோ வின் படி, எந்தெந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை, டுவிட் டர் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறது என்று தகவல் வெளியா கியுள்ளது. 

எனினும், எத்தனை ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்பதை மெமோவில் விவரிக்க வில்லை. 4.11.2022 அன்று  காலை 9 மணி முதல் பணியாளர்களுக்கு மின் னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், டுவிட் டரின் அனைத்து அலு வலகங்களும் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment