மிகப் பெரிய நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

மிகப் பெரிய நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சென்னை,செப்.30-  இந்திய மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ள தாவது:

இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்; பெட்ரோல் விலை குறையும்; ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக் கும் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. இப்போதைய நிலை என்ன? 8 ஆண்டுகளில் கோடானு கோடி  உழைப்பாளி மக்களின்  வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு,  வேலையின்மை நெருக்கடியை ஏற்படுத்தி, பெரும் துயரமே மிஞ்சுகிறது.  பணமதிப்பு இழப்பு அறிவிப்பு,   ஜி.எஸ்.டி.,  வரிக் கொள்ளை,  தீவிர தனியார்மயம்/ தாராள மயக் கொள் கைகளால் சிறு-குறு உற்பத்தியாளர் களையும் தொழில் முனைவோரையும் அனைத்து  சாதாரண மக்களையும் கடுமையாக பாதித்தது. இப்போது கடுமையான பெருவேக விலையேற்ற பிரச்சினை உருவாகியுள்ளது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் கதையாக, தனது  பெட்ரோல், டீசல் மற்றும்  இதர வரிக் கொள்கைகளால்  விலை  உயர்வுக்கு ஊக்கம் அழித்துவிட்டு, “அய்யோ, பணவீக்கம்” என்று ஓலம் இடுகிறது ஒன்றிய பாஜக அரசு. முக்கிய பண்டிகைகள் வரவுள்ள சூழலில், பண வீக்கத்தின் காரணமாக...  ஊக வணிக பணக்காரர்கள் கொள்ளை தொடரும். ஒன்றிய  அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.டி வசூல் கூடுதலாக கிடைக்கலாம். ஆனால், தொடர்ந்து சரிந்துவரும் சாமானியரின் வாங்கும் சக்தி மென்மேலும் சிதைக்கப்படும்.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்வதாலும், ஒன்றிய அரசின் விலையேற்ற வரிக் கொள்கைகளாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் மக்களை அழுத்தி நெருக்கடி தீவிரமாகும்.  பண வீக்கம் குறித்த விபரங்களை அலசிப் பார்த்தால் - அரிசி, கோதுமை போன்ற அடிப்படை யான உணவு தானியங்களே கடுமையான விலை யேற்றத்தை சந்தித்துள்ளன. 

இந்த நிலைமை வராமல் தடுக்க,  பொதுக் கொள்முதலை வலுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஏற்றுமதிக்கு குறுகிய கால தடை என்ற கண் துடைப்பு நடவடிக்கையை மட்டுமே மோடி அரசாங்கம் முன்னெடுத்தது. பொதுத் துறை நிறுவனங்களை அடிமாட்டு  விலைக்கு விற்பது நிற்கவில்லை. 

இந்திய,  வெளிநாட்டு பெரும் கம்பெனி களுக்கு வரிச்சலுகை கள், கடன் ரத்து என சலுகைகளுக்கு குறைய வில்லை. கார்ப்பரேட் பெருமுதலாளி நண்பர்களுக்காக மட்டுமே செயல்படும் மோடி அரசின் மோசமான கொள்கைகளும்,  அதன் சங்கிலித் தொடர் விளைவுகளும், நாட்டில் பொருளாதார மந்த நிலையை தீவிரமடையச் செய்கின்றன.  

இப்படியே நிலைமை சென்றால், மீள முடியாத பெரும் குழியில் நாட்டு மக்களின் வாழ்வு சிக்கிவிடும் அபாயம் உருவாகியுள்ளது. ஆனால் மோடி அரசாங்கத்திடமோ, நிதியமைச் சரிடமோ இந்த நிலைமை பற்றிய கவலையின் சுவடைக் கூட காண முடியவில்லை. சுயநல அர சியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக் கிறார்கள். இந்த நாசகர போக்கிற்கு எதிராக நாடெங்கும் அணிவகுப்போம்! 

-இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment