புதுடில்லி,செப்.1- இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனாதொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7 ஆயிரத்து ,946 பேருக்கு கரோனாகண்டறியப்பட்டது.
30.8.2022 அன்று 7 ஆயிரத்து 231ஆக இருந்த கரோனாபாதிப்பு நேற்று 7 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,44,28,393 லிருந்து 4,44,36,339 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 9,828 பேர் கரோனாபாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,35,852 லிருந்து 4,38,45,680 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கரோனாவுக்கு ஒரே நாளில் 37 பேர் பலியாகினர். இதுவரை 5,27,911 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 64,667 லிருந்து 62,748 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 18,92,969 கரோனாதடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 212 கோடியே 52 லட்சம் 'டோஸ்' கரோனாதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்...
கரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக 491 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 68 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 31.8.2022 ஒரு நாளில் 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 25 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,035 ஆக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்து 127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment