இந்தியாவில் புதிதாக 5,076 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

இந்தியாவில் புதிதாக 5,076 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,செப்.12- நேற்று (11.9.2022) காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 5,076 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 47,945 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,970 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 214.95 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் நேற்று (செப்.11) ஆண்கள் 238, பெண்கள் 193 என மொத்தம் 431 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 86 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 73,667 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 30,763 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (செப்.11) மட்டும் 461 பேர் குணமடைந்தனர். தமிர்நாடு முழுவதும் 4,886 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் இல்லை. தமிழ்நாட்டில் 10.9.2022 அன்று கரோனா தொற்று பாதிப்பு 434 ஆகவும், சென்னையில் 85 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.


No comments:

Post a Comment