தமிழ்நாட்டில் புதிதாக 442 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 442 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 258, பெண்கள் 184 என மொத்தம் 442 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 85 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 72,366 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 29,404 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று  (8.9.2022) ஒரு நாளில்  463 பேர் குண மடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 4,924 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் இல்லை.

தமிழ்நாட்டில் 7.9.2022 அன்று  கரோனா தொற்று பாதிப்பு 445 ஆகவும், சென்னையில் 81 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச் சியாக தமிழ்நாட்டில் பாதிப்பு எண் ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளது

 இந்தியாவில் புதிதாக 6,395 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளா கியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 50,342 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6,614 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 214.27 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment