தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு

நியூயார்க், ஜூலை 31- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அந்த வகை யில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

தடுப்பூசி செலுத்துவதால் அமெரிக்காவில் கரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்தி ருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரு கிறது. புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல் மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, தடுப்பூசி செலுத் திக் கொள்வதற்காக மக்களை ஊக்கப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில், நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர் களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அந்நகர மேயர் டெ பிளா சியோ அறிவித்துள்ளார். ஜூலை 30 முதல் செப்டம்பர் 2ஆவது வாரத்திற்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அவர் கூறி யுள்ளார்.

மேலும், செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் களுக்கு வாரம்தோறும் பரிசோ தனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 71 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment