நாடாளுமன்ற விசாரணை வேண்டும் - பா.ஜனதா கட்டுப்பாட்டில் ‘வாட்ஸ் அப்’ : காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

நாடாளுமன்ற விசாரணை வேண்டும் - பா.ஜனதா கட்டுப்பாட்டில் ‘வாட்ஸ் அப்’ : காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக.31, இந்தியாவில் ‘வாட்ஸ் அப் சமூக ஊடகம், மத்திய பா.ஜ.க. அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. அதில் ‘வாட்ஸ்-அப்’பின் மூத்த நிர்வாகி சிவநாத் துக்ரால், ஆளும் கட்சியின் (பா.ஜனதா) தடையில்லா பக்தர், அவர் தொழில் முறை நடத்தையில் பாரபட்சமாக நடந்து கொண்டு உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் செய்தி தொடர்பா ளர்கள் பவன் கெரா, பிரவிண் சக்கரவர்த்தி ஆகியோர், டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஒரு அரசியல் கட்சியால் (பா.ஜ.க.) முறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகிற வாட்ஸ் அப்பை 40 கோடி இந்தியர்கள் நம்ப முடியுமா? வாட்ஸ் அப்பை பயன் படுத்தும் 40 கோடி இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்கள், பரிமாற்ற விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை பா.ஜனதா வுடன் பகிரப்படவில்லை,  தவறாக பயன்படுத்தப்படவிலலை என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?''' என கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


-----------------


No comments:

Post a Comment