விண்வெளியில் 288 நாட்கள் தங்கி சாதனை படைத்த வீராங்கனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 29, 2019

விண்வெளியில் 288 நாட்கள் தங்கி சாதனை படைத்த வீராங்கனை


வாஷிங்டன், டிச. 29- அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெ ளியில் பன்னாட்டு ஆய்வு மய்யத்தை அமைத்துள்ளன. அந்த மய்யத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.


அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் பன் னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.


அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த  ஜூலை மாதம் 20ஆம் தேதி பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத் துக்கு சென்றார். 28.12.2019 சனிக்கிழ மையுடன் அவர் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 288 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.


பிப்ரவரி 6, 2020 இல் கிறிஸ்டீனா கோச் பூமிக்குத் திரும்புகிறார், அப் போது அவர் 300 நாட்களுக்கு மேல் கழித்திருப்பார்.


பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (அய்.எஸ்.எஸ்) கிறிஸ்டீனா கோச் தங்கியிருந்தபோது, 4 முறை விண்வெளியில் நடந்து உள்ளார்.  அக்டோபர் 12 ஆம் தேதி முதல்  தனது சக ஊழியரும் சிறந்த நண்பருமான ஜெசிகா மீருடன்  விண் வெளியில் நடந்து இருவரும் உலகின் தலைப்பு செய்தியானார்கள்.


பன்னாட்டு விண்வெளி நிலையத் திற்கு வெளியே ஏழு மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில், பெண்கள் இரு வரும் வெண்வெளி நிலையத்தின்  சூரிய வலையமைப்பிற்கு கூடுதலாக உடைந்த மின் கட்டுப்படுத்தியை சரிசெய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.


நிலையத்தின் சூரியசக்தி அமைப் பிற்கான புதிய சூரிய  பேட்டரிகளை நிறுவ ஜனவரி மாதத்தில் மீண்டும் இரண்டு முறை வெளியே செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


15 பெண்கள் ஒரு விண்வெளிப் பயணத்தை இதற்கு முன் நடத்தியிருந் தாலும், ஒவ்வொரு முறையும் அவர்கள் ஆண் சகாக்களுடன் சென்று  வந்திருந் தனர்.


36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந் திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.


No comments:

Post a Comment