பி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளரா ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

பி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளரா ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கண்டனம்

featured image

சென்னை,ஜன.31- தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர், புதுக் கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ரகுபதி நேற்று முன்தினம் (29.1.2024) விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது,
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர் களுக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரி கிறது. நாள்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக ஊடகங்களில் வரு கிறது என்ற மறைமுகப் போட் டியே இருப்பது போலத் தெரிகிறது.
மாநில அரசின் மீது விமர் சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத் தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
28.1.2024 அன்று நாகப்பட்டி னம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட் டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட் டத்தைப் பற்றி விமர்சித் துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக் கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த் தைகளைப் பயன்படுத்தி இருக் கிறார்.
அரசுத் திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க் கட்சியைப் போல ஊடகங்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவது தான் ஒரு ஆளுநருக்கு அழகா?
எந்த ஆதாரத்தின் அடிப் படையில் ஊழல் என்று கூறு கின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும், எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?
கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச் சைப்படுத்தி இருக்கிறார் ஆளு நர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகி கள் மற்றும் ஏழைகளுக்கு இழைக் கப்பட்ட கேலிக்குரிய அவமான மாம். அய்ம்பது ஆண் டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத் துவ – ஜாதியவாத சக்திகளால் தீ வைத் துக் கொளுத்தப்பட்ட தியாகி களை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் எழுப்பட்ட நினைவுச் சின் னம் அது. அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகை யில்தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றி லும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?
அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக் கிறது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும் பட்டுமே. உலகத் தலைவர்கள் வரும்போது குஜராத் மாநிலத்து ஏழைகளின் வாழ்விடங்களை பச்சை ‘ஸ்கிரீன்’ போட்டு மறைத் ததை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.
எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தை யும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி.
‘தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்’ என்றார் ஆளுநர். வரலாற்றில் காலம் காலமாக இருக்கும் பெயரை மாற்றும் அதிகாரத்தை இவ ருக்கு யார் கொடுத்தது என்று சொன்னதும், அதனைத் திரும் பப் பெற்றுக் கொண்டார் ஆளுநர். சில நாட்களுக்கு முன்னால், ‘காந்தியால் இந்தியா வுக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை’ என்றார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், ‘ நான் அப்படிச் சொல்லவில்லை’ என்று சொல்லி விட்டார்.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள் ளாரா என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா என் றால் இல்லை.
குடும்ப வேலையாக அடிக் கடி டில்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக் கைக்காக எப்போதாவது டில்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை. அவர்தான், சொந்த மாக எந்த நன்மையும் செய்ய வில்லை. நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர் களுக்கும் உதவியாக இருக்கி றாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப் பவராகவும் இருக்கிறார் ஆளுநர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணை வேந்தரைக் காப்பாற்றும் நட வடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளை யும் பல மாத காலமாக ஊறு காய்ப் பானையில் ஊற வைப் பதைப் போல கிண்டி மாளி கையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத் தில் வழக்குப் போட்டோம்.
“ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில்தான் மாநி லத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. அந்த அதிகாரங் களை வைத்து மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை கள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராக, தன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல் பட்டு வருகிறார்.
ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பா.ஜ.க தலைமை அனுமதி அளித்தால், ‘அவருக் கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது’ என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். -இவ்வாறு அமைச் சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment