சுயமரியாதை நாள் சிறப்புக் கருத்தரங்கம் சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

சுயமரியாதை நாள் சிறப்புக் கருத்தரங்கம் சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

சிதம்பரம், நவ. 30- சிதம்பரம் மாவட்ட கலந்தரையா டல் 22.11.2023 புதன் மாலை 6 மணிக்கு, குமார குடி சுயமரியாதை சுடரொளி மீனாட்சிசுந்தரம் அரங்கில் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன் முன்னிலையில் நடைபெற்றது.

காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் ப.முருகன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் க.பெரி யண்ணசாமி, திருமுட் டம் ஒன்றிய செயலாளர் இரா.இராசசேகரன், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் ஆறு முகம், மாவட்ட மகளி ரணி தலைவர் சுமதி பெரி யார்தாசன், மாவட்ட துணைத் தலைவர் கோவி. பெரியார்தாசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தீர்மானங்கள்

மேனாள் கழக மகளி ரணி செயலாளர் பார் வதி மறைவுக்கும், மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91ஆவது பிறந்த நாளை, கருத்தரங்கம் நடத்தி சிறப்பாகக் கொண் டாடுவதென தீர்மானிக் கப்பட்டது. ‘விடுதலை' சந்தா சேர்த்து 2.12.2023 அன்று ஆசிரியரிடம் அளிப் பது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளை, 24.12.2023 அன்று மாவட் டத்திலுள்ள சிதம்பரம், பாளையங்கோட்டை, பிரச்சாவரம், புவனகிரி ஆகிய இடங்களிலுள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்தல், மற்ற இடங் களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தல் என்றும் தீர்மா னிக்கப்பட்டது.  பெரியார் நினைவுநாள் பொதுக் கூட்டம் நடத்துவதென வும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன், போர்ச்சுகல் நாட்டிற்கு சென்று வந்த தற்கும், மாவட்ட செய லாளர் அன்பு.சித்தார்த் தன் பிரான்சு நாட்டிற்கு சென்று வந்ததற்கும், மாவட் டக் கழகம் பாராட்டுதல் களைத் தெரிவித்துக் கொள்வதென தீர்மானிக் கப்பட்டது.

இறுதியாக மாவட்ட தொழிலாளர் அணி அமைப் பாளர் தெ.ஆறுமுகம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment