நடப்பு ஆண்டில் 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

நடப்பு ஆண்டில் 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

புதுடில்லி, நவ. 7- இந்த ஆண்டு 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.   

டில்லியில் நடைபெற்ற இந் துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை பொறுத்தவரை, சட்டமியற்றும் அவையால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதற்கு இடையில் ஒரு கோடு உள்ளது.   ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தீர்ப்பு அளிக்கும் நீதிபதி, சட் டத்தில் பற்றாக்குறை இருப்பதாக சுட்டிக்கட்டினால், அந்த பற்றாக் குறையைச் சரிசெய்ய சட்டமி யற்றும் அவை ஒரு சட்டம் இயற் றலாம்.

ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்று கூறி அதை சட்ட மியற்றும் அவையால் நேரடியாக ரத்து செய்ய முடியாது. நீதிபதிகள் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும் போது, அரசியல்சாசன தார்மீக அடிப்படையில் வழிநடத்தப்படுகி றார்களே தவிர, பொதுமக்களின் தார்மீக அடிப்படையில் அல்ல. 

இந்த ஆண்டு சுமார் 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட் டுள்ளது. இன்னும் ஒன்றரை மாதம் பாக்கி இருக்கிறது. நீதித் துறையில் நுழைவு நிலையில் அமைப்பு ரீதியான தடைகள் உள் ளது உண்மை. இங்கு சரிசமமான வாய்ப்பு நிலவினால் மேலும் பல பெண்கள் இத்துறைக்கு வரு வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment