எல்லையில் பாதுகாப்புக்காக தேனீக்கூடுகள் அமைக்க முடிவாம் எல்லைப்பாதுகாப்புப்படை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

எல்லையில் பாதுகாப்புக்காக தேனீக்கூடுகள் அமைக்க முடிவாம் எல்லைப்பாதுகாப்புப்படை தகவல்

புதுடில்லி,நவ.7- இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மேற்கு வங்காளத்தில் உள்ள எல் லைப்புற பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தேனீக் கூடுகளை அமைக்கவுள்ளனர். 

இந்தப் புதிய முயற்சியின் மூல மாக எல்லையைத் தாண்டி கால் நடை மற்றும் மற்ற பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக் கிறார்கள் எல்லை பாதுகாப்புப் படையினர்.

முன்மாதிரி இல்லாத இந்தத் திட்டம் சமீபத்தில் 32-ஆவது பிஎஸ்எஃப் படையணி சார்பில் நாடியா மாவட்டத்தின் எல்லைப் புற பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்தப் பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற் படுத்தி தரும் நோக்கிலும் அறிமு கப்படுத்தப்பட்டது.

இந்தியா, வங்கதேசத்துடன் 4096 கிமீ நீளத்திற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் 2,217 கிமீ மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது.

இந்தத் திட்டத்தில் ஒன்றிய அரசும் பங்கெடுக்கவுள்ளதாம். மருத்துவ தாவரங்களை தேனீக் கூடுகளைச் சுற்றி அமைக்கும் போது தாவரங்களின் பெருக்கத்திற் கான மகரந்தச் சேர்க்கையாளர் களாகவும் தேனீக்கள் பணி யாற்றும். இந்தப் பகுதியில் கால் நடை, தங்கம், வெள்ளி மற்றும் போதை மருந்துகள் கடத்தும் செயல்கள் அதிகமாக நடைபெறு வதாகவும் கடத்தல்காரர்கள் வேலியை உடைப்பதும் உடைக்க முயற்சிப்ப துமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

எல்லை வேலிகளில் குறிப் பிட்ட இடைவெளியில் தேனீக் கூடுகள், மரச் சட்டகத்தோடு அமைக்கப்படும். எத்தனை எண் ணிக்கையில் என்பது குறித்து தெளிவான அறிவிப்பில்லை.

No comments:

Post a Comment