வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கல்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.8.2023 அன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னை, போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள யூபிஎஸ் நிறுவனம், இந்தியாவில் முதலாவதாக, சென்னை போரூரில் அமைந்துள்ள தொழில்நுட்ப மய்யத்தில் "நான் முதல்வர்" திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாயப்புக்கான பயிற்சி பெறுவ தற்கு அனுமதிக் கடிதங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த் தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment