போதைப் பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

போதைப் பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், மே 30- பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெரம்பலூரில்  மகிழ்ச்சியான "ஞாயிறு, மகிழ்ச்சியான தெரு" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரது உத்தரவின்படி, பெரம்பலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக  28.05.2023ஆம் தேதி பெரம்ப லூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான வெங்க டேசபுரத்தில் மகிழ்ச்சியான ஞாயிறு, மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாம்ளா தேவி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான தப்பாட் டம், சிலம்பாட்டம், குச்சிப்பிடி போன்ற பல்வேறு நிகழ்ச்சி களும், காவல்துறையின் வாத்திய குழு மூலம் இன்னிசை நிகழ்ச்சியும், ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதை பழக்க வழக்கங்களில் அடிமையாவதை தவிர்க்குமாறும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது..

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக நடனம் ஆடினார்கள். பெரு நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த கேளிக்கை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை,  பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் நடத்தியது பொது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் சிறப்பாக நடனம் ஆடியவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புப் பரிசு வழங்கி பாராட்டினார்.

மேற்படி நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன் (தலைமையிடம்), வேலுமணி (மது விலக்கு அமலாக்கப் பிரிவு), பழனிச்சாமி (பெரம்பலூர் உட்கோட்டம்) சீராளன் (மங்களமேடு உட் கோட்டம்) மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வா ளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment