அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஜூன் மாதத்தில் செயல்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஜூன் மாதத்தில் செயல்படும்

திருப்பூர்,மே 29 - அத்திக்கடவு-அவினாசி திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறினார். பெருமாநல் லூரில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத் தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டமா னது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடி குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.1756.88 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம்பயன்பாட்டிற்கு வரும் அத்திக் கடவு-அவினாசி திட்டம் 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் ஆறுநீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் கட்டுமா னப்பணிகள் முடிவடைந்துள்ளது.எம்.எஸ்.குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது. மின்மாற்றிகள், வி.டி.பம்புகள், மின் மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர் உந்து நிலையங்களிலும் பொருத் தப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.

இத்திட்டமானது கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற் றும் பிரதானக்குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரேற்று நிலையங்களின் இடையி லுள்ள கிளைக்குழாய்கள் மற்றும் 1045 குளம்,குட்டைகளில் பொருத்தப்பட் டுள்ள கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து சோதனை ஓட்டப்பணிகள் முடிக்கப் பட்டு இத்திட்டமானது அடுத்த மாதம் ( ஜூன் ) பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது

இந்த திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 428 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 8,151.71 ஏக்கர் விவசாய நிலங்களும், ஈரோடு மாவட் டத்தில் 359 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 8,767.69 ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் கோவை மாவட் டத்தில் 258 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 7,548.58 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக ஊத்துக் குளி குளம், குன்னத்தூர் குளம், ஆதியூர் குளம், மேற்குபதி குளம், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் கிரே நகர் நீரேற்று நிலையம் மற்றும் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் இமாம்பூண்டி நீரேற்று நிலையங்களில் நீரேற்றம் செய்வதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட் சுமணன். அத்திக்கடவு -அவினாசி திட் டத்தின் கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், செயற்பொறியாளர்கள். எஸ்.மன்மதன், .நரேன்சி, உதவி செயற் பொறியாளர்கள் சங்கர், ஆனந்தி, வெங்கட விஜயகுமார், வெங்கடாஜல பதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment