தேர்வுகளுக்கு
ஒன்றிய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தகவல்.
அபராதம்
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த இரண்டரை மாதங்களில் 10,134 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மாநகர போக்கு வரத்து காவல்துறையினர் அபராதமாக ரூ.10.48 கோடி வசூலித்துள்ளனர்.
விதிமுறைகள்
ஆன்லைன் விளையாட்டு - புதிய விதிமுறைகள் குறித்து அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மழை
தமிழ்நாட்டில் நேற்று 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ள நிலையில் ஈரோடு, கரூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
தங்குமிடம்
சென்னையில் வீடு இல்லாமல் தெருவோரம் தங்கி இருப்பவர்களுக்கு 35 நவீன தங்குமிடங்களை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நன்கொடை
கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 26 மாநில கட்சிகள் ரூ.186 கோடியை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள தாக தேர்தல் சீர்திருத்த ஆலோசனைக் குழுவான ஏடிஆர் தன்னார்வ அமைப்பு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
போலி மருந்துவர்கள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 18 நாள்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது என காவல் துறை இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment