சென்னை,ஏப்.23- உலக புத்தக நாளையொட்டி (23.4.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
நல்ல புத்தகங்கள் நல்ல தோழன்!
ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது!
அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வைதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம்.
புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங் களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது.
அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்!
-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment