பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பாக் நீரிணைப்பை 20.20 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பாக் நீரிணைப்பை 20.20 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி

பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணைப்பு கடலை நீந்திக் கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த சிறீராம் சிறீநிவாஸ் என்பவர் படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ராஜ சேகரன், வனிதா இணையரின் மகன் ராம் சீனிவாஸ் (29). இவர் பிறவியிலேயே கால், கைகள் செயல்படாத மனவளர்ச்சி குன் றிய மாற்றுத்திறனாளி. ‘செரிபரல் பால்சி’ என்ற பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப் பட்டவர்.

இவரால் பேசவோ, தானே தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ முடியாது. ஆனாலும், இவரது பெற்றோர் இவரை நீச்சல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் 4 வயது முதல் நீச்சலை ‘ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் கற்றுக் கொடுக்கத் தொடங்கினர்.

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்: பொது வாக நீந்துபவர்கள் கை, கால் களை அசைத்து ‘ப்ரீ ஸ்டைல்’ முறையில் நீந்துவர். ஆனால், இவரால் கால்களை அசைத்து நீந்த முடியாது என்பதால் 

நெஞ்சை அசைத்து (`ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்') நீந்துவார்.

கடந்த 2018இல் தேசிய மாணவர் படை நடத்திய போட் டியில் கடலூர்- புதுச்சேரி இடை யேயான தொலைவை கடலில் நீந்தி சாதனை படைத்தார். இதற்காக ஒன்றிய அரசின் சமூக நீதித் துறை, மாற்றுத் திறனாளி களுக்கான சிறந்த முன்மாதிரி இளைஞர் என்ற தேசிய விருதை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விடமிருந்து பெற்றார்.

மேலும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு 40 பதக்கங்களை வென் றுள்ளார். இந்நிலையில், பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந் தியாவிலுள்ள தனுஷ்கோடி வரையிலுமான பாக் நீரிணைப்பு கடலை நீந்தி சாதனை புரிவதற் காக சிறீராம் சிறீநிவாஸ் ராமேசு வரம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து பயிற்சியாளர்கள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலை மன்னாருக்கு புறப்பட்டு சென்றார். 

தலைமன்னாரில் மாலை 05.10 மணியளவில் நீந்தி புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 01.30 மணியளவில் 20.20 மணி நேரம் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனையை ராம் சீனி வாஸ் வந்தடைந்தார். இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின்(SDAT)பார்வையாளர் விஜயக்குமார் உறுதி செய்தார்.

அரிச்சல்முனை வந்தடைந்த ராம் சீனிவாஸை அவரது குடும்பத்தினர், ராமேசுவரம் டி.எஸ்.பி உமா மகேஸ்வரி, சுங்கத் துறை கண்காணிப்பாளர் சம்பத், கடற்படை ஆய்வாளர் கனக ராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.இது குறித்து ராம் சீனிவாசின் பெற்றோர் கூறியதாவது, “ராம் சீனிவாஸ் மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந் தையாக இருந்த போதும், அவரை எதிலாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் நீச்சல் கற்றுக்கொடுக்க தொடங்கினோம். அவருக்கும் இதில் விருப்பம் ஏற் பட்டது. தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங் களை வென்றார். ‘செரிபரல் பால்சி’ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வளர்ப்பதே சிரமம். இவரைப் போன்று ஏராள மான குழந்தைகள் உள்ளனர்.

அவர்களின் பெற்றோர் களுக்கு இவர் ஓர் ஊக்குவிப் பாளராக இருப்பார். இவரைப் போன்ற குழந்தைகளை பெற் றோர் காப்பகங்களுக்கு அனுப் பாமல் தாங்களே பாதுகாத்து வளர்க்க வேண்டும். பாக் நீரிணைப்பு கடலை சுமார் 30 கி. மீட்டர் இரவும் பகலும் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளது பெருமையாக உள்ளது” என்றனர். 

இதற்கு முன்னதாக தலை மன்னார், தனுஷ்கோடி இடையே யான பாக் நீரிணைப்பு கடற் பகுதியை 20.03.2022 அன்று மும் பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்து உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment