Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
"குடிஅரசு" தரும் வரலாற்றுச் சுவடுகள்
March 11, 2023 • Viduthalai

 தமிழில் பாடவைத்த தமிழ்த் தொண்டர்கள்

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருவிழாவுக்குப் பாட வந்த தோழர் மகாராஜபுரம் விசுவநாத அய்யர் அவர்களை, “அய்யர்வாள். இது தமிழர் பண்டிகை; இங்குள்ளவர்கள் தமிழர்கள்; தங்களுக்குக் கொடுக்கும் பணம் தமிழர்களுடையது; தயவு செய்து தமிழில் பாடுங்கள்" என்று ஒரு தமிழ்த் தொண்டன் பணிந்து வேண்டிக் கொண்டால், அதை லட்சியம் செய்யாமல் அய்யர் தெலுங்கில் பாட்டை ஆரம்பித்துவிட்டு, பிறகு அந்தத் தமிழ் தொண்டர், "ஓ அய்யரே, நான் சொல்லுவது உமக்குக் காதில் படவில்லையா” என்று உரத்துச் சொன்ன பிறகு அய்யர், "எனக்குத் தமிழ் மீது துவேஷமில்லை; தமிழில் பாடத் தெரியாது" என்று சொல்லியதற்குப் பதிலாக தமிழ்த் தொண்டர் உடனே எழுந்து, “ஏங்காணும், 12,000 ரூபாய் பெற்றுக்கொண்டு நந்தனார் நடிப்பில், தோழர் சுந்தராம்பாள் அம்மையார் (நந்தன்) காலில் விழுந்து தமிழ் பாடின நீர், எவ்வளவு தைரியமாய் இங்கு இவ்வளவு பேர் முன்னிலையில் தமிழ் தெரியாது என்கிறீர்" அன்றியும்,

"திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் தமிழ் வித்துவானைக்கூட தமிழில் பாட இடந்தராமல் தடுத்த நீர், எனக்குத் தமிழினிடத்தில் துவேஷமில்லை என்று எவ்வளவு துணிவாகப் பேசுகிறீர்? தமிழில் பாடுவதானால் பாடும்; இல்லாவிட்டால் நாங்கள் போய் விடுவோம்" என்று சொன்ன பிறகு, அதுவும் தோழர் நாடிமுத்து பிள்ளை அவர்கள், “ஓ அய்யரே! தமிழில் தான் பாடித் தொலையுமே" என்றும் கூட்டத்தில் இருந்த டிப்டி கலெக்டரும், டிப்டி சூப்ரண்டும் தமிழ்த் தொண்டனைப் பார்த்து "இந்தப் பாட்டு தெலுங்கில் துவக்கப் பாட்டாய்விட்டது. இது முடிந்தபின் அய்யர் தமிழில் பாடுவார்' என்றும் சொன்ன பிறகு தமிழ்த் தொண்டர்.

"அதுவரை நான் வெளியில் இருந்துவிட்டு தமிழ் பாட்டு தொடங்கியவுடன் வருகிறேன்" என்று சொல்லி அதிகாரிகளிடம் வணக்கமாக அனுமதி பெற்று வெளியில் போய் இருந்துவிட்டு தமிழ்ப் பாட்டு துவக்கிய உடன் உள்ளே வந்து உட்கார்ந்த பிறகு அய்யர்வாள் முழுவதும் தமிழிலேயே பாடி மக்களைக் களிப்பித்தார் என்றால். இதை சுயமரியாதை மக்களின் காலித்தனமென்றோ கலாட்டா என்றோ சொல்லுவதா, அய்யர்வாளின் ஆரியப்புத்தி இவ்வளவு தொல்லை கொடுத்தது என்று சொல்லுவதா?

இது நடந்த பிறகு பட்டுக்கோட்டை அக்கிரகார ஆரியர்கள் பலர் சேர்ந்து பாகவதருக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதி தமிழ்த் தொண் டர்கள் பலர் மீது 107 கிரிமினல் புரசிஜர்படி ஜாமீன் கேசு போட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது எப்படியோ நடந்து போகட்டும்.

- "குடிஅரசு" -  தலையங்கம் - 20.5.1944


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn