வடக்குத்து அண்ணா கிராமத்தில் உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

வடக்குத்து அண்ணா கிராமத்தில் உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்

வடக்குத்து, மார்ச் 11 குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் - விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் எண்பதாவது சிறப்பு நிகழ்ச்சியாக உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம் 8.3.2023 அன்று மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் தமிழேந்தி தலைமையில், மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணசுந்தரி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஊராட்சி மகளிரணி தலைவர் விஜயா வரவேற்புரை ஆற்றினார். கவிதா, வடலூர் ஜெயசிறீ மகளிர் நாளின் சிறப்புகள் குறித்து உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அன்னை மணியம்மையார் வீராங்கனையாக தொண்டறம் ஆற்றிய பங்கு பணிகள்பற்றியும், உலக மகளிர் நாள் வரலாறு குறித்தும் விளக்க உரை ஆற்றினார்.

மகளிர் தோழர்கள் கலைச்செல்வி, புவனேஸ்வரி, மலர், மகாலட்சுமி, செல்வி மஞ்சுளா, மங்கலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் மோகன், கவிஞர் தீபக், இந்திரா நகர் கிளைக் கழக தலைவர் பாஸ்கர், மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வடலூர் ஜோதிமணி ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment