நீங்களோ நாங்களோ
நினைத்துப் பார்க்க முடியாத சாதனை
எதேச்சதிகாரத்திலும்
என்னே என் சாதனை என்று
தன்னலச் சாதனை
புரிந்தவர் முன்னே
விண்ணே வியக்கும் வண்ணம்
உழைப்பே ஓய்வென்ற
ஒப்பற்ற தலைவர்
ஒய்யாரமாய் இருப்பவர்
மத்தியில்
அய்யா பெரியார் வழியில்
மெய்யாய் நின்று
மேன்மையாய் உழைத்த
கையும் காலும்
மெய்யும் சுறுசுறுப்பாய்
இனி என்ன செய்ய வேண்டும்
என்று மன‘தில்’ ஓய்வில்லாமல்
உட்கார்ந்திருக்கிறார் நம் ஆசிரியர்
நம்பிக்கையின் மருத்துவர்
நம் வாழ்க்கை நெறியைத் திருத்துபவர்!
- கவிஞர் கே.பாண்டுரங்கன்
No comments:
Post a Comment