புதிதாக 1249 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

புதிதாக 1249 பேருக்கு கரோனா

புதுடில்லி, மார்ச் 25  நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1249 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக் கையின்படி நாடு முழுவதும் புதிதாக 1249 கரோனா பாதிப் புக்கள் பதிவாகி உள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண் ணிக்கையானது 7927ஆக உயர்ந் துள்ளது.

கருநாடகா மற்றும் குஜராத் மாநிலத்தில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் 1,05,316 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. 

சுகாதாரத் துறையின் இணைய தகவலின்படி நாடு முழுவதும் 220.65கோடி கரோனா தடுப் பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment