சென்னை, மார்ச் 15- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணக் குறும்படத்தின் நாயகர்கள் பொம்மன் - பெல்லி இணை யருக்கு இன்று (15_3_2023) தலைமைச் செயலகத்தில் தலா ரூ.1 லட்சம் வழங் கியும், பயனாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று
(15_-3_-2023) தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகா மில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப் பாளர்களான பொம்மன்-பெல்லி இணையர் சந்தித்தனர்.
அவ்விணையருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுக் கேடயமும் பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோ லைகளை வழங்கினார்.
இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை பன்னாட்டளவில் கவனம் பெற்றது.
யானை பராமரிப்பு பணியாளர்கள் 91 பேருக்கும் ரூ.1 லட்சம், அடிப்படை வசதிகள்
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலை யில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகி றார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத் தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச் சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப் படும் என முதலமைச்சர் அறிவித் துள்ளார்.
மேலும், யானை பராமரிப்பாளர் களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்கள். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகா மில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மய்யம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்க னவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக் கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மரு.மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர். வெ. இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப் ரியா சாகு மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனப் பாதுகாவலர் சிறீனிவாஸ் ஆர். ரெட்டி, புலிகள் காப்பக கள இயக்குநர் து.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.