அன்று இனிப்பு - இன்று கசப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

அன்று இனிப்பு - இன்று கசப்பா?

 நரேந்திர மோடி 2013ஆம் ஆண்டு அகம தாபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசியது:

நான் பிபிசி நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தான் நம்பிக்கை கொண்டேன். தூர்தர்சனைப் பார்த்து நம்பிவிடாதீர்கள். ஆகாசவாணி ரேடியோ கேட்டு நம்பிவிடாதீர்கள். நமது ஊரில் உள்ள பத்திரிகை என்ன செய்தி தரு கிறதோ அதை நம்பி விடாதீர்கள் எதையும் ஆய்வு செய்து நம்புங்கள்.

பிபிசி செய்தி நிறுவனம் சரியான செய்தி யைத் தரும். அது முழுமையான நம்பிக்கை யான உறுதியான செய்தியைத் தரும் என்று கூறியிருந்தார்.

அன்று பிபிசியைப் பற்றி அபார நம்பிக்கை மோடிஜிக்கு! அதே பிபிசி தான் இப்பொழுது மோடி பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித் துள்ளது.

அப்பொழுது இனித்தது - இப்பொழுது கசக்கிறது!

No comments:

Post a Comment